June 9, 2025
பொது அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் செயல்பட்டவரை தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

பொது அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் செயல்பட்டவரை தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி நகரம், தெரசம்மாள் காலனி, எண்.30, 13வது வார்டு என்ற முகவரியைச் சேர்ந்த மைக்கேல் என்பவரது மகன் தோமையார் என்ற சின்னத்தம்பி (வயது 36/2025) என்பவர் கடந்த 04.01.2025 அன்று பழனி நகர காவல் நிலைய எல்லைப் பகுதியில் ஒரு நபரை கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றத்தின் அடிப்படையில் பழனி நகர காவல் நிலையத்தினரால் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதிரி தோமையார் என்ற சின்னத்தம்பி என்பவர் மேற்சொன்ன வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது திண்டுக்கல் மாவட்ட சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொது அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் செயல்பட்ட வகையில் தோமையார் என்ற சின்னத்தம்பி என்பவரை தடுப்புக்காவலில் வைத்து உத்தரவிடக் கேட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களால் அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்று தோமையார் என்ற சின்னத்தம்பி என்பவரை தடுப்புக்காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களால் உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து தோமையார் என்ற சின்னத்தம்பி என்பவர் மதுரை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.