
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா.
:அலங்காநல்லூர், ஜன.27 –
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடியரசுதினத்தையொட்டி, குடியரசு தின கொடியை, யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி தலைமை தாங்கி ஏற்றி வைத்தார். மண்டல அலுவலர் கண்ணன், அலுவலக மேலாளர் காளீஸ்வர குமார், முன்னிலை வகித்தனர். இதில் அலுவலக பணியாளர்கள், கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் தலைமை தாங்கி குடியரசு தின கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். துணை தலைவர் சுவாமிநாதன், மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். இதில் அலுவலக பணியாளர், மகளிர் குழுவினர்கள் கலந்து கொண்டனர். இளநிலை உதவியாளர் அபிதா நன்றி கூறினார்.
மேலும் பாலமேடு பேரூராட்சி அலுவலகம் முன்பாக பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன் தலைமைதாங்கி குடியரசு தின கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
துணை தலைவர் ராமராஜ், மற்றும் கவுன்சிலர்கள். முன்னிலை வகித்தனர். இதில் அலுவலக பணியாளர்கள் மகளிர் குழுவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் அரசு அலுவலகம் முன்பு நடந்தது. சமூக நல பணி அலுவலர் மீனாட்சி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் செல்வமூர்த்தி தீர்மான நகலை வாசித்தார். கூட்டத்தில் மகளிர் குழு உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டுவதற்கும், வடிகால் அமைக்கவும், அடிபடை,குடிநீர்,வசதிகள் விரிவுபடுத்தவும், தீர்மானிக்கப்பட்டது.