June 9, 2025
அறந்தாங்கியில் பிளாஸ்டிக் அகற்றி விழிப்புணர்வு பேரணி

அறந்தாங்கியில் பிளாஸ்டிக் அகற்றி விழிப்புணர்வு பேரணி

அறந்தாங்கி,ஜன.25-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் அகற்றி விழிப்புணர்வு பேரணி மற்றும் மஞ்சள் பை அறிமுகத்தை நகர்மன்ற தலைவர் இரா ஆனந்த் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்படி அறந்தாங்கி நகர் மன்ற உறுப்பினர் மங்கையர்க்கரசி செந்தில் முன்னிலையில் குட்டக்குளம் பகுதியில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிக் கழிவுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்
கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து குட்டக்குளத்தைச் சுற்றி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகளும் வழங்கப்பட்டன. குளத்தைச்சுற்றி தேங்கியிருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டன. நிகழ்ச்சியில் முனைவர். ரமேஷ் தலைமையில் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள், வழக்கறிஞர் பாரதிராஜா தலைமையில் வளர்மதி நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆடிட்டர் தங்கதுரை தலைமையில் கார்னிவல் நர்சிங் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டனர்.

அறந்தாங்கி நகராட்சி சுகாதார பொறுப்பு அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.