June 9, 2025
சோழவந்தானில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்புரை

சோழவந்தானில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்புரை

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதிவாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தானில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் மாணிக்கம் எம் வி கருப்பையா மகேந்திரன் தமிழரசன் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் அரியூர் ராதாகிருஷ்ணன் முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் அம்மா பேரவை விருகை தர்மர் பேரூர் செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் கேபிள் மணி வரவேற்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி முருகேசன் ஆகியோரும் சிறப்புரையாற்றி பேசினார்கள் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்பிஉதயகுமார் பேசுகையில் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஜல்லிக்கட்டு போட்டியை ஒழிக்க நினைத்து அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ஏறுதழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திப் பார்த்தார்கள் ஆனால் கூட்டம் சேராததால் இன்று குழந்தைகளை வைத்து பலூனை தழுவுகிறார்கள் முப்பது ஆயிரம் கோடி ஊழல் செய்தது யார் என்று அனைவருக்கும் தெரியும் அதில் ஈடுபட்டவர்கள் பெயர்கள் விரைவில் வெளிவரும் இதை நான் சொல்லவில்லை அவர்கள் அமைச்சரவையில் உள்ள பழனிவேல் தியாகராஜன் என்பவரே சொல்லி இருக்கிறார் 2021ல் ஸ்டாலின் மக்களால் முதல்வராக தேர்ந்தெடுகவிடவில்லை வெறும் 43 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக தோல்வி அடைந்தது பல தொகுதிகளில் 50 ஓட்டுகள் 20 ஓட்டுகள் 10 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது 2021 தேர்தலிலேயே எடப்பாடி பழனிச்சாமியை தான் மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள் அது நூலிலையில் நழுவி விட்டது 2026ல் அது போல் நடக்காது எடப்பாடி பழனிச்சாமி கண்டிப்பாக தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் மக்களுக்கு நல்லது செய்வார் இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன் திருப்பதி உஷா வெற்றிவேல் துரை தனராஜன் புளியங்குளம் ராமகிருஷ்ணன் வக்கீல் திருப்பதி சுதாகரன்சுமதி அன்பழகன் எம் வி பி ராஜா கவி காசிமாயன் தமிழழகன் மகேந்திர பாண்டி ராஜாரகு சிங்கராஜ பாண்டியன் சிவசக்தி சாமிநாதன் மகளிர் அணி பஞ்சவர்ணம் லட்சுமி வனிதா சோழவந்தான் முன்னாள் சேர்மன் எம்.கே முருகேசன் மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் சண்முக பாண்டியராஜா முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி தென்கரை இராமலிங்கம் நிர்வாகிகள் பேரூர் துணைச் செயலாளர் தியாகு தெற்கு ரத வீதிசிவா ஜெயபிரகாஷ் துரைக்கண்ணன்
பேட்டை மாரி சுரேஷ் வைகை ராஜா பாலா 1வது வார்டு முத்துக்குமார் 2வது வார்டு மருது செது 7வது வார்டு எஸ்பி மணி 10வது வார்டு மணிகண்டன் விவசாய அணி வாவிடமருதூர் ஆர்.பி. குமார் முடுவார் பட்டிஜெயச்சந்திரமணியன் முத்துக்கிருஷ்ணன் தண்டபாணி விஜயபாபு சக்திவேல் அப்பாச்சி கண்ணன் ஜூஸ் கடை கென்னடி மன்னாடிமங்கலம் ராஜபாண்டி கல்லாங்காடு ராமு குருவித்துறை விஜயபாபு காசிநாதன் கச்சிராயிருப்பு முனியாண்டி மேலகால் காசிலிங்கம் திருவேடகம் மணி என்ற பெரியசாமி சோழவந்தான் சரத் இளைஞர் பாசறை அழகர் அண்ணா தொழிற்சங்கம் சின்னன் சக்திவேல் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர் பேரூராட்சி கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.