June 8, 2025
கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் திறன் பயிற்சி தொடக்கவிழா நடைபெற்றது.

கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் திறன் பயிற்சி தொடக்கவிழா நடைபெற்றது.

ஜனவரி 22, கீழக்கரை

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் (TNSCST) சார்பாக தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு ‘என்ற தலைப்பில் மூன்று நாட்கள் நடைபெறும் இரண்டாவது கட்ட பயிற்சி முகாமின் தொடக்க விழா கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கல்லுரியின் முதல்வர் திரு. ஷேக்தாவூது அவர்கள் தலைமை தாங்கினார் . பாலசுப்ரமணியன் மின்னணுவியல் துறை அவர்கள் வரவேற்று பேசினார். கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி திரு. கணேஷ் குமார் அவர்கள். இந்த பயிற்சி முகாமின் துவக்கவிழாவில் கலந்து கொண்ட அனைவர்க்கும் வாழ்த்துதுறை வழங்கினார்கள்.

சுதன் பவர் டெக் மற்றும் ஸ்ரீ ஹர்ஷா எலக்ட்ரிகல் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் பூங்குன்றன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில் மாணவர்கள் தொழில் முனைவோர்களாக உருவாக வேலை வாய்ப்புகளை வழங்கி நாம் ஓர் உந்து சக்தியாக இருக்க வேண்டும். மேலும் மாணவர்கள் பல்வேறு துறை வல்லுனர்களாக பயிற்சி பெற்று முன்னேற இது போன்ற பயிற்சி முகாம்கள். பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழி வகுக்கும் என்று பேசினார்கள்.

இந்த பயிற்சி முகாமில் இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 6 பாலிலடக்னிக் கல்லூரியை சேர்ந்த 150 மாணவர்கள் பங்குபெற்றார்கள். நிறைவாக அமைப்பியல் துறைத்தலைவர் செந்தில் ராஜன் அவர்கள் நன்றி கூறினார்கள். இந்த மூன்று நாட்கள் பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆலோசனைப்படி அணைத்து துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.