
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கழக நிறுவனர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜகுரு, பெரியகுளம் நகர் கழக செயலாளர் பழனியப்பன், தேனி கிழக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர், கழகத்தின் போர்வாள் அப்பாஸ் மைதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தவமணி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தேனி நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்புரையாற்றினார்.
தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முறுக்கோடை ராமர், கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்வராஜ், மற்றும் தலைமைக் கழக பேச்சாளர் நல்லாற்று நடராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.கூட்டத்தில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பார்த்திபன், விவசாய அணி இணை செயலாளர் பெரிய வீரன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சதக்கத்துல்லா, கழக அம்மா பேரவை துணை செயலாளர் ஜெயக்குமார் ,மாவட்ட கழக இணைச் செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட கழக பொருளாளர் வைகை பாண்டி,பொதுக்குழு உறுப்பினர் தவமணி கருப்பசாமி, உட்பட கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர் கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், செயலாளர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.