June 8, 2025
புதுவை உப்பளம் தொகுதி பெரிய வாய்க்கால் பாலம் சீரமைப்பு பணியை அனிபால் கென்னடி ஏம்எல்ஏ ஆய்வு செய்தார்

புதுவை உப்பளம் தொகுதி பெரிய வாய்க்கால் பாலம் சீரமைப்பு பணியை அனிபால் கென்னடி ஏம்எல்ஏ ஆய்வு செய்தார்

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணியின் கீழ் பெரிய வாய்க்கால் மற்றும் பாலம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது, இப்பணியானது சுமார் 2 கோடி ரூபாய் செலவில் நடை பெற்று வருகிறது. புதுவையில் உப்பளம் தொகுதி உட்பட்ட வம்பாகீரப்பாளையம் இந்திரா காந்தி விளையாட்டு விளக்கம் ஒட்டி அமைந்துள்ளது சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. வார இறுதிநாட்களில் அதிகளவு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகின்றனர். 

அதுமட்டுமின்றி வம்பாகீரப்பாளையம், திப்புராயபேட்டை வாழ் மக்கள் மத்தியில் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது, இந்த வாய்க்கால் மீது உள்ள பாலம் அளவை பெரிதாக புனரமைத்தால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இருக்கும் என திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கேட்டு கொண்டதின் பேரில் பொது பணி துறை ஸ்மார்ட் சிட்டி மூலம் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் பாலம் இடித்து பெரிதாக உயராமாக கட்டப்பட்டு வருகிறது.

 இதனை திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், உடன் திமுக தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், மாநில பிரதிநிதி மணிகண்டன், கிளை செயலாளர்கள் செல்வம், சந்துரு, இருதயராஜ், இசாக்கு, ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.