
பழனி தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்,பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், பழனி சார் ஆட்சியர் கிஷன்குமார், பழனி கோட்ட துணை கண்காணிப்பாளர் தனஜெயன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ராஜேஸ்வரிசுவி, உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உதவி ஆணையாளர் லட்சுமி, செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி செயற்பொறியாளர் தஅழகுரீனா, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) ராஜா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) நாகராஜன், வட்டாட்சியர்கள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.