
மும்பை மாநகராட்சி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் - மும்பை விழித்தெழு இயக்கம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும். தேர்தலைப் புறக்கணிக்க காரணம் என்ன? மும்பையிலிருந்து தமிழ்நாட்டுக்கு தீபாவளி கிறிஸ்துமஸ் புத்தாண்டு சபரிமலை தைப்பூசம் பொங்கல் கோடைவிடுமுறை க்கு சிறப்பு ரயில் புதிய ரயில் ரயில் நீட்டிப்பு ரயிலில் பயணிகள் சந்திக்கும் பிரச்சனை என எண்ணற்ற பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காததால் ஒட்டுமொத்த மும்பை தமிழ் மக்கள் தமிழ் சங்கங்கள் தமிழ் கட்சிகள் அமைப்புகள் இயக்கங்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிறீதர் தமிழன் வேண்டுக்கோள் வைத்துள்ளார்
நீண்ட ஆண்டுகளாகவே 1.மும்பையில் தமிழ்நாடு இல்லம் (தமிழ் பவன்) அமைப்பது, 2. புதிய ரயில், சிறப்பு ரயில், அதிவேக ரயில் கோரிக்கை; 3. இட்லி வியாபாரிகள், டாக்ஸி ஓட்டுனர்கள், சிறு கடைகள், வியாபாரிகள், வீட்டு பராமரிப்பு, வீட்டில் வேலை செய்ப்பவர்கள் , கட்டுமான தொழிலாளர்கள், சுயதொழில்,தொழில் முனைவர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள், திரைத்துறை தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியம், இன்சூரன்ஸ்
மற்றும் பாதுகாப்பு;
அரசியல் பதவிகளில் மும்பை தமிழர்களுக்கு முக்கியத்துவம்; 6. மும்பை பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் மும்பை மாநகராட்சி பள்ளியில் அடிப்படை வசதிகள் 7. தாராவி, ரே ரோடு, சீதக்கம்ப், ஜெரிமேரி, மலாடு மால்வாணி, காந்திவிலி, விலேபார்லே, கலினா, அந்தேரி, பாண்டுப், தானே போன்ற குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கண்ணியமான அடிப்படை வசதிகளுடன் நிரந்தர வசிப்பிடம் (மும்பை மக்கள்தொகையில் 55% பேர் குடிசை பகுதிகளில் வசிக்கின்றனர் ) மக்கள்,
அமைப்புகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வராததால் இந்த தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுக்க வேண்டியுள்ளது என மும்பை விழித்தெழு இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிறீதர் தமிழன் வேண்டுக்கோள் வைத்துள்ளார்.
மத்திய அரசு கல்வி மற்று வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு;