June 7, 2025
நாகர்கோவில்பத்திரபதிவு அலுவலகத்தில்கொள்ளையோ கொள்ளை பத்திரபதிவு துறை அமைச்சர் கவனிப்பாரா?

நாகர்கோவில்பத்திரபதிவு அலுவலகத்தில்கொள்ளையோ கொள்ளை பத்திரபதிவு துறை அமைச்சர் கவனிப்பாரா?

நாகர்கோவில் பத்திரபதிவு அலுவலகத்தில் கொள்ளையோ கொள்ளை இதனை பத்திரபதவி துறை அமைச்சர் தனி கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட சுதந்திர இந்தியா தினசரி நாளிதளின் தலைமை நிருபரும் நியூ சுதந்திர இந்தியா வார இதழின் ஆசிரியருமான பொன்.இராஜகோபால் வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார்.

நாகர்கோவில் பத்திரபதிவு அலுவலகத்தில் அரசுக்கு செலுத்த வேண்டி தொகை அனைத்தும் செலுத்திய பிறகு கணக்கில் காட்டப்படாமல் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் மட்டுமே பத்திரம் பதிவு செய்யப்படுகிறது இல்லையெனில் பத்திரம் நிராகரிக்கப்படுகிறது ஏன் என்று கேட்டால் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி லட்சக்கணக்கில் பணம் வாங்குகிறார்கள் கொடுக்கவில்லை என்றால் அந்த பத்திரத்தை பெண்டில் வைக்கிறார்கள் மீண்டும் கேட்ட பணத்தை கொடுத்தால் மட்டுமே பத்திரத்தை ரிலீஸ் பண்ணுகிறார்கள் மேலும் கணக்கில் காட்டாமல் பணம் கொடுத்தால் சம்மந்தபட்ட இடத்தை பார்வை இடமலே பத்திரத்தை பதிவு செய்து கொடுக்கிறார்கள்.

இந்த அவலநிலை அங்கிருக்கின்ற ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏஜன்ட்களுக்கும் நன்கு தெரியும் இந்த நிலமை மாற மாவட்ட பத்திரபதிவு அதிகாரி உட்பட அனைவரும் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை எல்லை விட்டு எல்லை மாற்ற வேண்டும் அது மட்டுமில்லாமல் அமைச்சர் நேரில் தலையிட்டு அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் இது அனைத்துக்கும் உடந்தையாக இருப்பவர் மாவட்ட பத்திரபதிவு அதிகாரியே ஆகும் உதரணமாக பத்திரபதவு எண் 337/2004 (P – 58) ஆகும்இந்த ஒரு சாதரண பத்திரத்திற்கு (3 சென்று) கணக்கில் காட்டாமல் பணம் வாங்கி உள்ளார்கள் இதன் நிலை முதலில் எப்படி இருந்தது என்று விசாரணை நடத்தினாலே அனைத்தும் தெரிந்துவிடும் இதே நிலைமை நீடித்தால் தமிழ அரசுக்கும் பத்திரபதிவு அமைச்சருக்கு பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

  • பொன்.இராஜகோபால்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    | ChromeNews by AF themes.