
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
பழனியில் இருந்து மதுரைக்குப் புறப்பட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மகளிர் அணியினரை பார்க்க வந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது :- பழனியில் இருந்து மதுரையில் நடைபெற உள்ள பாஜக மகளிர் அணி நீதி பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்ற பாஜக மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், ஜனநாயக முறையில் போராட முயலும் பாஜகவினரை முடக்குவது தவறானது என்றும் தெரிவித்தார். மேலும் மகளிர் அணியினர் அடைத்து வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்தில் மகளிர் அணி என்ன தப்பித்து விடாமல் இருப்பதற்காக ஐம்பதற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், ஆனால் திருமண மண்டபத்தை ஒட்டியே 24 மணி நேரமும் மதுபான கூடங்கள் செயல்பட்டு வருவதை போலீசார் கண்டுகொள்ளவில்லை என்றும், மகளிர் அணி பெண்களை அடைத்து வைத்துள்ள இந்த நேரத்திலும் கூட மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது என்று கூறிக் கொண்டே அருகில் இருந்த மதுபான கூடத்திற்குள் தலைவர் கனகராஜ் தலைமையிலான பாஜகவினர் உள்ள சென்றனர். அப்போது மதுபான கூடத்திற்குள் பணியாளர்கள் உட்பட சிலர் இருந்தனர். பாஜகவை கண்டவுடன் அங்கு இருந்தவர்கள் வேகமாக வெளியேறினர். அப்போது 24 மணி நேரமும் நடைபெறும் மதுபான விற்பனையை தடுக்க முடியாத காவல்துறையினர், பெண்ணுக்கு நீதிகேட்டு போராட்டத்திற்கு சென்ற பெண்களை தீவிரவாதி போல கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் உச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நமது நிருபர்