
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புத்தாண்டை வரவேற்க்கும் விதமாக காவல்துறைசார்பாக இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புத்தாண்டை வரவேற்க்கும் விதமாக டி.எஸ்.பி சுதிர்லால் தலைமையில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு பேனும் விதமாக கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.இதில் டி.எஸ்.பி சுதிர்லால், நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் வி எஸ் ஹமீது சுல்தான் ,கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வீர கணேஷ், மகளிர் காவல் ஆய்வாளர்கள்,திமுக மாவட்ட அயலக அணி தலைவர் முகம்மது ஹானிபா,மற்றும் நகர் நிர்வாகிகள், கீழக்கரை இரத்த உறவுகள் அமைப்பு, ஏராளமான பொதுமக்கள் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக் கூறியும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.