
வாடிப்பட்டியில் எம்ஜிஆர் நினைவு தினம்.
வாடிப்பட்டி, டிச.24- மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக, வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் எம்ஜிஆர் 37-வதுநினைவு தினம் அனு சரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கி, எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினார். ஊராட்சி மன்றத்
தலைவர் ஆலயமணி, கச்சைகட்டி பிச்சை,பாசறை மாவட்டத் துணைச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில் நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சந்திர போஸ் வரவேற்றார். இதில், நிர்வாகிகள் ஜே.சி.பி. மணி ,மூர்த்தி, மருதமுத்து, கார்த்திக், ஹரி, அழகுமலை கண்ணன், யோகேஸ்வரன் உட்பட
பலர் கலந்து கொண்டனர். முடிவில், பார்த்தீபன் நன்றி கூறினார்.