June 9, 2025
திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த மக்களும் கண்ணீர் வடிக்கிறார்கள் என ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு.

திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த மக்களும் கண்ணீர் வடிக்கிறார்கள் என ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு.

வாடிப்பட்டி, டிச.24- மதுரை புறநகர் மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக செயற்குழு, பொதுக்குழுவில் நிறைவேற்றபட்ட 16 தீர்மானங்களை விளக்கியும் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் 9 பேர் கொண்ட புதிய கிளை அமைப்பது பற்றியஆலோசனைக் கூட்டம் ஆண்டிபட்டி பங்களாவில் ந ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி.கருப்பையா, மாணிக்கம், தவசி, தமிழரசன், எஸ் எஸ் சரவணன், நீதிபதி, பெரியபுள்ளான், மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் பாசறை மாவட்ட துணைசெயலாளர் எம்.கே.மணிமாறன் தீர்மான அறிக்கை வாசித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்,மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
இந்த நாள் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது, நாட்டு மக்களுடைய உணவு, தேவை பூர்த்தி செய்வது விவசாய தொழில் இந்தியாவிலேயே பெரும்பான்மையான மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் தான் அமைந்திருக்கிறது.இந்த நாட்டினுடைய முதுகெலும்பாக விவசாயம் இருப்பதால்
தேசிய விவசாய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளிலே விவசாயிகளுக்குதிமுக அரசு என்ன பாதுகாப்பு அளித்து இருக்கிறது என்று பார்த்தால் கேள்வி குறியாகி அச்சம் தான் நமக்கு ஏற்படுகிறது.

அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் கிருஷ்கர்மா விருதை பெற்று வேளாண் உற்பத்தியில் ஒரு சரித்திர சாதனை படைத்தது. தற்போது இந்த திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என்று சொல்லி மானிய கோரிக்கையினுடைய மறுபதிப்பாக தான் வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடுகிறார்கள் அதில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை அதில் மக்கள் பயனடைந்தற்கான எந்த புள்ளி விவரங்களும் இல்லை.

இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 7 வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்று திமுக செயற்குழுவில் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி சந்திப்பது உறுதி. காரணம்போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவதில், மக்கள் நலன் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதில், சட்ட, திட்டம் வகுப்பதிலே தோல்வி அதை செயல்படுத்துவதிலை தோல்வி. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இந்த நான்கு ஆண்டு காலத்திலே மாணவர்கள், ஆசிரியர்கள்,பேராசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மகளிர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா? அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்று அவர்கள் கண்ணீரோடு உள்ளார்கள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் கண்ணீரோடு உள்ளார்கள், படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்?
என ஒட்டு மொத்த மக்களும் கண்ணீர் வடிக்கிறார்கள் ஆகவே அவர்களுக்கு நீங்கள் சட்டங்களையும், திட்டங்களையும் வகுத்துக் கொடுப்பதிலே தோல்வியடைந்திருக்கிறீர்கள் அதனால் நீங்கள் வருகிற சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி சந்திக்க இருக்கிறீர்கள் இவ்வாறு அவர் பேசினார். முடிவில் கோட்டை
மேட்டு பாலன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.