
பழனியில் தவெக சார்பில் அறிஞர் அம்பேத்கரின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி : டிசம்பர், 06
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் , அறிஞர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி ,மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அம்பேத்கரின் புகழ் பாடும் விதமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி பாலன், மிதுன், மனோகரன் , மகளிர் அணியினர் மற்றும் கட்சிகளின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டு அம்பேத்கரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பழனி நிருபர் : நா.ராஜாமணி.






