
பழனி முருகன் கோயிலில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார்.
பழனி நவம்பர் : 11
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மைய பகுதியில் செயல்பட்டு வரும் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்வதற்காக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பழனிக்கு வருகை தந்துள்ளார். முன்னதாக பழனி முருகன் கோயிலுக்கு சென்ற அன்பில் மகேஷ் சாமி தரிசனம் செய்தார். பின்னர் போகர் சன்னதியில் வழிபட்டார். பழனி கோவிலுக்கு வருகை தந்த அமைச்சரை பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து வரவேற்று பிரசாதங்கள் வழங்கினார்.






