
மதுரை கோயில்களில் நவராத்ரி விழா...
மதுரை :
மதுரையில் உள்ள கோயில்களில், நவராத்ரியை முன்னிட்டு, அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மதுரை வண்டியூர் லெட்சுமி நாராயணர் கோயில், மதுரை அண்ணாநகர், தாசில்தார் சௌபாக்ய விநாயகர், சித்தி விநாயகர், மதுரை கோமதி புரம் ஜூப்புளி டவுன் ஞான சித்தி விநாயகர், பட்டி வீரன் பட்டி மாரியம்மன் கோயில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், ஜெனி நாராயணப் பெருமாள் கோயில், திருமொகூர் காளமேகப் பெருமாள், சோழவந்தான் திரௌபதியம்மன், தென்கரை மூலநாதர் உள்ளிட்ட கோயில்களில், நவராத்ரியை ஒட்டி பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்து, பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.






