March 2, 2026
தன்னை கடவுளாக நினைக்கின்றாரா தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் ? கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி :

தன்னை கடவுளாக நினைக்கின்றாரா தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் ? கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி :

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் விக்னேஷ் பாலாஜி, கோவிலுக்குள் காலணிகள் அணிந்து சென்றுள்ளது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் பிரகாரங்களில் காலணிகள் அணிந்து செல்வது ஒரு மத மற்றும் சமூகக் குற்றமாகக் கருதப்படுகிறது. இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன.இதை ஆகம விதிகளை பின்பற்ற வேண்டிய ஒரு அறங்காவலர் குழு தலைவர் ஒருவரே மீறி இருப்பது மத உணர்வுகளை அவமதிக்கும் செயலாக அமைந்துள்ளது

கோவில்கள் இறைவனின் இருப்பிடமாக கருதப்படுகின்றன. எனவே, அங்கு தூய்மை மற்றும் புனிதத்தன்மை பேணப்பட வேண்டும்.

காலணிகள் அழுக்குகளைச் சுமந்து வருவதால், அவை கோவிலின் புனிதத்தன்மையைக் கெடுப்பதாகக் கருதப்படுகிறது.

இறைவனுக்கும், கோவிலுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக,காலணிகளை வெளியே கழற்றிவிட்டுச் செல்வது ஒரு பொதுவான பழக்கமாகும். இது இறைவனின் முன்னிலையில் நம் பணிவைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

இந்த புகைப்படத்தில் உள்ள மற்ற நபர்கள் காலணிகள் எதுவும் அணியாமல் இருக்கும் பொழுது அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி மட்டும் காலணி அணிந்திருப்பது தன்னை கடவுளுக்கு நிகராக நினைக்கும் அவரது மனநிலையை காட்டுகிறது.

மேலும் நமது பண்டைய மரபுகள் மற்றும் நம்பிக்கைகளின்படி, கோவில் வளாகத்திற்குள் காலணிகளை அணிந்து செல்வது, இறைவனின் கோபத்திற்கு ஆளாவதற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

இது ஒருவகையில் தெய்வீக சக்திகளுக்கு எதிரான செயலாகவும் குற்றமாகவும் கருதப்படுகிறது.

காலணிகளை வெளியே கழற்றி வைப்பது ஒரு பொதுவான சமூக வழக்கம். இது ஒரு கோவில் அல்லது வழிபாட்டு தலத்திற்குள் நுழையும்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறை பல கோவில்களில், பிரகாரங்களுக்குள் காலணிகள் அணிந்து செல்வதைத் தடை செய்யும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதை மீறினால், குறிப்பிட்ட அபராதம் அல்லது நடவடிக்கை எடுக்கப்படலாம். இந்த விதிமுறைகள், பக்தர்களின் உணர்வுகளையும், கோவிலின் புனிதத்தன்மையையும் காக்க உதவுகின்றன.

எனவே, ஒரு கோவில் பிரகாரத்திற்குள் நுழையும்போது, தங்கள் காலணிகளை வெளியே கழற்றி வைப்பது ஒரு மத மற்றும் சமூகப் பொறுப்பாகும் எனவே அறநிலைத்துறை அதிகாரிகள் கோயிலுக்குள் காலணிகளை அணிந்து சென்ற விக்னேஷ் பாலாஜி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக நடவடிக்கை எடுத்து மதம் மரபுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் இதை பின்பற்றாதவர்களை பதவிகளில் இருந்து அகற்றவும் வேண்டுமென்று ஆன்மீக நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *