June 8, 2025
பழனி கோவிலுக்கு வந்த இடத்தில் நகையை தவறவிட்ட தம்பதியினரை தேடி அவர்களிடமே நகையை ஒப்படைத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பழனி கோவிலுக்கு வந்த இடத்தில் நகையை தவறவிட்ட தம்பதியினரை தேடி அவர்களிடமே நகையை ஒப்படைத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் இடைப்பாடியைச் சேர்ந்தவர்கள் செல்வகணபதி- கலைவாணி தம்பதியினர். ஐடி ஊழியரான செல்வகணபதி கடந்த சனிக்கிழமை அன்று தனது மனைவி கலைவாணி மற்றும் தனது ஒருவரது மகன் ஆகியோரை அழைத்துக் கொண்டு பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

அப்போது பழனி நகர காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி, பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இடைப்பாடிக்கு திரும்பினார். ஊருக்குச் சென்று பார்த்தபோது தனது மகன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது.

எந்த இடத்தில் காணாமல் போனது என்பது தெரியாததால் செல்வகணபதி நகை காணாமல் போனது குறித்து புகார் ஏதும் அளிக்கவில்லை.

இந்நிலையில் பழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செல்வகணபதி தங்கியிருந்த அறையில் கீழே விழுந்து கிடந்த 2சவரன் தங்கச் சங்கிலியை கண்ட விடுதி உரிமையாளர் விடுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம், தங்கச்சங்கிலி இடைப்பாடியைச் சேர்ந்த செல்வகணபதி குடும்பத்தினருடையது என்பதை உறுதி செய்தார்.

இதை எடுத்து தங்கச் சங்கிலியை பழனி நகர போலீசாரிடம் விடுதி உரிமையாளர் ஒப்படைத்தார். விடுதி உரிமையாளர் அளித்த தகவலின் பேரில், பழனியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் செல்வகணபதி சென்ற காரின் பதிவெண்ணை எடுத்து அவரது ஊர் மற்றும் விலாசத்தை கண்டு பிடித்தனர்.

மேலும் அவரிடம் விசாரித்ததில் அவரது குழந்தையின் கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்கச் சங்கிலி காணாமல் போனதும் உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து செல்வகணபதி கலைவாணி தம்பதியினரை பழனி வரவழைத்து அவர்கள் தவறவிட்ட இரண்டு சவரன் தங்க சங்கிலியை பழனி நகர போலீசார் ஒப்படைத்தனர். பழனி கோவிலுக்கு வந்த இடத்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி காணாமல் போனநிலையில், அதை தேடாமல், போனால் போகட்டும் என ஊருக்கு சென்ற நிலையில், அவர்களை தேடி தங்க நகை வந்ததும் மகிழ்ச்சி அடைந்தனர்‌.

நகைகளை பெற்றுக்கொண்ட தம்பதியினர் தாங்கள் தங்கியிருந்த விடுதியில் பணிபுரியும் ஊழியர்கள், விடுதி உரிமையாளர் மற்றும் பழனி நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தனர்.

பழனி கோவிலுக்கு வந்த பக்தர்களின் நகை காணாமல் போனதும், அதை கைப்பற்றி உரியவர்களிடம் ஒப்படைத்த விடுதி உரிமையாளர் மற்றும் பழனி நகர காவல் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.